இந்தியாவில் ஒரே நாளில் 23,285 பேர் கொரோனாவால் பாதிப்பு – மத்திய சுகாதாரத்துறை தகவல்!!

0

இந்தியாவில் புதிதாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. தற்போது கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா:

இந்தியாவில் கடந்த ஆண்டு இறுதி முதல் கொரோனா தாக்கம் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் தலை ஓங்கியுள்ளது. கடந்த சில நாட்களாகவே கொரோன பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் மஹாராஷ்டிராவில் தற்போது மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு வருகிற 16ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. தற்போது கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்த தகவலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 23,285 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டின் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 1,13,08,846 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 117 பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர். இதனால் நாட்டின் மொத்த உயிர் இழப்பின் எண்ணிக்கை 1,58,306 ஆக அதிகரித்துள்ளது.

#INDvsENG டி 20 தொடர் – உத்தேச அணி பட்டியல் வெளியீடு!!

நேற்று ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 15,157 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் நாட்டின் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,09,53,303 ஆக அதிகரித்துள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 1,97,237 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வரை நாட்டின் குணமடைந்தவர்களின் விகிதம் 96.92% ஆகவும், உயிர் இழந்தவர்களின் விகிதம் 1.40% ஆகவும் மற்றும் சிகிச்சை பெறுபவர்களின் விகிதம் 1.68% ஆகவும் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here