வேட்பாளரை எதிர்த்து அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம் – பரபரப்பாகும் தேர்தல் களம்!!

0

கடந்த புதன்கிழமை அன்று அதிமுக தனது தேர்தல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. தற்போது செங்கல்பட்டில் அறிவித்த தேர்தல் வேட்பாளரை எதிர்த்து அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதிமுக:

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும் இன்று முதல் அதற்கான வேட்பு மனு தாக்களும் துவங்கியுள்ளது. இந்நிலையில் அதிமுக கட்சி இரு தினங்களுக்கு முன்பு தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதனால் பல்வேறு பிரச்சனைகள் தற்போது நிலவி வருகிறது. வேட்புமனு தாக்கல் கால அவகாசம் முடிவதற்கு இன்னும் 7 நாட்களே உள்ளது. இந்நிலையில் அதிமுக கட்சியில் பிரச்சனைகள் ஏற்படுவது சற்று சிக்கலான விஷயம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் தேர்தலில் அதிமுகவிற்கு பின்னடைவு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தற்போது அதிமுக கட்சி சார்பாக செங்கல்பட்டு தொகுதியில் கஜேந்திரன் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் அமமுக கட்சியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டமன்ற தேர்தல் – போடி தொகுதியில் பன்னீர் செல்வம் வேட்புமனு தாக்கல்!!

அமமுக கட்சியில் இருந்து வந்தவருக்கு அதிமுக தலைமை வேட்பாளர் பதவியை அறிவித்துள்ளதை அதிமுகவினர் தற்போது எதிர்த்து வருகின்றனர். மேலும் செங்கல்பட்டு தொகுதியில் கஜேந்திரனை மாற்றக்கோரி சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் தற்போது அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இதனால் தேர்தல் களமே பரபரப்பாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here