தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் ஆர்யா – ஈழத்து பெண் வெளியிட்ட ஆதாரம்!!

0

கடந்த சில நாட்களாகவே பெண்கள் பிரச்சனைகளில் சிக்கி வரும் ஆர்யா தற்போது மீண்டும் ஓர் பெண் பிரச்சனையில் சிக்கியுள்ளார். தற்போது அந்த பெண் அதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டுள்ளார்.

ஆர்யா:

தமிழ் சினிமாவில் பிலே பாயாக வளம் வந்தவர் தான் ஆர்யா. இவருக்கு திருமணம் முடிக்க பல தொலைக்காட்சிகள் அதற்கென தனி நிகழ்ச்சியும் நடத்தினர். இதனால் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது. மேலும் பிரபல தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அபர்னதி என்ற பெண் ஆர்யாவை தனது கணவன் என்று நினைத்து வாழ்ந்து வருகிறார். ஆனால் இதனை கண்டுகொள்ளாத ஆர்யா சில வருடங்களுக்கு முன்பு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து தனது பிலே பாய் வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைத்தார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இவர் திருமணம் செய்துகொண்டாலும் இவர் பெயர் பெண்கள் பிரச்சனைகளில் சிக்குவது இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று தான் சொல்லவேண்டும். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு ஜெர்மனியை சேர்ந்த ஓர் பெண் ஆர்யா அவரது தாயுடன் சேர்ந்து தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னிடம் 80 லட்சம் பணமோசடி செய்துள்ளார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதனால் அனைவரும் அதிர்ந்து போகினார். ஆனால் இதுகுறித்து ஆர்யா எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

இந்தியாவில் ஒரே நாளில் 23,285 பேர் கொரோனாவால் பாதிப்பு – மத்திய சுகாதாரத்துறை தகவல்!!

தற்போது மற்றோரு ஈழத்து பெண் ஒருவர் ஆர்யா தன்னை பணத்துக்காக மிரட்டியுள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஆர்யா செய்த மெசேஜ் மற்றும் ஆடியோவை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார். தற்போது அது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ஆர்யா எதிர்ப்பை எதுவும் வெளியிட்டால் தான் இந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும் என்று அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். ஆரம்ப காலத்தில் பிலே பாயாக சுற்றி திரிந்த ஆர்யாவிற்கு தற்போது இவ்வளவு பிரச்சனைகள் வருவது சற்று கவலைக்குரியதே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here