மதுபான கடைக்கு பூட்டு, சரக்கு அடிக்காம இருக்க முடியல..! விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட கேரள நபர்..!

0

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் கேரளாவில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளதை அடுத்து மது கிடைக்காததால் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

ஊரடங்கு உத்தரவு..!

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் 21 நாள்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த இதைத் தவிர வேறு வழியில்லை என்று பிரதமர் அறிவித்துள்ளார். இந்தியா எடுத்த இந்த அதிரடி நடவடிக்கை உலகம் முமுவதும் பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் கேரளாவில் மது கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மது அருந்துவோர் மதுபாட்டில்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

தற்கொலை..!

திருச்சூர் மாவட்டத்தில் குன்னம்குளம் அருகேயுள்ள துவானுர் கிராமத்தைச் சேர்ந்த சனோஜ் (வயது 35) கடந்த இரு நாள்களாக மது பாட்டில் கிடைக்காமல் அடிக்கடி புலம்பிக் கொண்டிருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மது பாட்டில் கிடைக்காததால் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதையடுத்து, மதுவுக்கு அடிமையான நான்கு பேரை மது மீட்பு மையத்தில் சேர்த்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here