19 ஆண்டுகள் நடந்த வியட்நாம் போரை மிஞ்சிய கொரோனா உயிரிழப்புகள் – அதிர்ச்சியில் அமெரிக்கா..!

0

உலகளவில் அமெரிக்க தான் கொரோனா வைரஸால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. நாங்கள் தான் உலகில் பெரிய வல்லரசு நாடு என சொல்லிக் கொண்டிருந்த அமெரிக்காவால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. அங்கு கொரோனாவால் தினமும் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்து வருவது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா:

கொரோனா வைரஸ் சீனாவில் தான் உருவாக்கப்பட்டது என அமெரிக்க அதிபர் திட்டவட்டமாக கூறி வருகிறார். மேலும் அதற்கு தங்களிடம் ஆதாரம் உள்ளது எனவும் தெரிவித்து உள்ளார். கொரோனவால் உயிரிழப்புகள் மட்டுமின்றி பொருளாதாரமும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஊரடங்கு உத்தரவை தளர்த்த உள்ளதாக டிரம்ப் தெரிவித்து உள்ளார். இதனால் உயிர் பலி அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

கொரோனா உயிர் பலி:

அமெரிக்காவில் இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 3 நாட்களாக தினமும் 2 ஆயிரம் பேர் உயிரிழந்து வருகின்றனர். செவ்வாய் கிழமை 2,207 பேரும், புதன் கிழமை 2,502 பேரும், கடந்த 24 மணிநேரத்தில் 2,053 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதுமட்டுமின்றி 15 ஆயிரம் பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டு உள்ளது.

18 ஆண்டுகள் நீடித்த அமெரிக்க – வியட்நாம் போரில் 58,318 அமெரிக்க வீரர்கள் உயிர் இழந்தனர். ஆனால் தற்போது கொரோனவால் 4 மாதங்களில் 63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்து இருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here