கேகேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் சப்பாத்தி பொறித்த மீன் உட்பட விசேஷ உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்..
கொரோனா வைரஸ் பாதிப்பு..!
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கேரளாவில் இதுவரை வைரசால் 25 க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் 148 பேரை தாக்கிய கொரோனா..! எந்த மாநிலத்தில் அதிகம்..?
இந்நிலையில் கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிகச்சை பெரும் நோயாளிகளுக்கு விசேஷ உணவுகள் வழங்கப்படுகிறது.
விசேஷ உணவுகள்..!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு காலை உணவாக தோசை, சாம்பார், 2 அவித்த முட்டை, 2 ஆரஞ்சு பழங்கள், டீ மற்றும் ஒரு பாட்டில் குடிதண்ணீர் வழங்கப்படுகிறது. மதிய உணவாக சப்பாத்தி, பொறித்த மீன் மற்றும் கேரள உணவு வகைகள் வழங்கப்படுகிறது. மாலையில் பிஸ்கெட், டீயும், இரவு அப்பம், 2 வாழைப்பழங்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிப்பு..! ஒரே நாளில் கிடுகிடுவென உயர்வு..!
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தனி உணவு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு காலை 2 அவித்த முட்டை, சூப், பழச்சாறு ஆகியவை வழங்கப்படுகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |