இந்தியாவில் 148 பேரை தாக்கிய கொரோனா..! எந்த மாநிலத்தில் அதிகம்..?

0

இந்தியாவில் கொரோனா வைரஸ் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியா முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது.

கொடூர நோயான கொரோனா..!

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 165 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரசால் 8,000 பேர் இறந்துள்ளனர். உலக முழுவதும் 1,97,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவிற்கு அடுத்தபடியாக அதிக அளவில் இத்தாலி , ஸ்பெயின் , ஈரான் போன்ற நாடுகளில் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. அதே போல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்தியாவில் வேகமாக அதிகரிப்பு..!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 136 லிருந்து 148 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களான மகாராஷ்டிராவில் 40 பேரும், கேரளாவில் 26 பேரும், ஹரியானாவில் 15 பேரும் ,உத்தரபிரதேசத்தில் 15 பேரும், கர்நாடகாவில் 11 பேரும், டெல்லியில் 8 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here