சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இன்று வரை 62 பேர்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
4000க்கு மேல் பலி..!
சீனாவின் ஹவான் நகரில் உள்ள இறைச்சி சந்தையில் இருந்து பரவியதாக கூறப்படும் கொரோனா வைரஸின் தாக்கம் முதல் முதலில் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது. தொடர்ந்து மற்ற நாடுகளுக்கும் பரவிய இந்த வைரஸினால் இதுவரை 1,10,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பலி எண்ணிக்கையும் 4000ஐ தாண்டி உள்ளது.
புதிதாக 18 பேர்க்கு..!
கேரளாவில் நேற்று மட்டும் புதிதாக 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்ட்டு உள்ளது. இதனால் இந்தியாவில் கோவிட் 19ஆல் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்து உள்ளது.
இதனால் கேரளாவில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று இருப்பதாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நபரும் தற்போது முழுவதுமாக குணமடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |