வட்டிக்காக நண்பனையே மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்த இன்ஜினியரிங் மாணவர்கள்.! 3 பேர் கைது.!

0

புனேவில் வட்டி தராத காரணத்தால் தன் நண்பனையே மாடியிலிருந்து தள்ளி விட்டு கொன்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இன்ஜினியரிங் மாணவர்கள்


மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்ஜினியரிங் மாணவர்களான அபினவ் ஜாதவ், அக்ஷய் கோரடே, தேஜய் குஜார், சாகர் சில்வேரி ஆகியோர் தங்கி இருந்தனர். இதை சாகர் தன் நண்பர்களிடம் 15000 ரூபாய் 10% வட்டிக்கு கடனாக பெற்றுள்ளார். இதையடுத்து சாகர் வட்டிகள் சரியாக தராததால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறுகள் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து மார்ச் 9 கண்டிப்பாக வட்டி பணத்தை தருவதாக உறுதியளித்திருந்தார்.

சொன்ன தேதியில் பணத்தை தராததால் நண்பர்களுக்கிடையே தகராறு நிகழ்ந்துள்ளது. இதனால் கோவம் அடைந்த நண்பர்கள் 11வது மாடியிலிருந்து சாகர் ஐ தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார். விஷயம் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த மூவரையும் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை, உடலில் காயம் ஏற்படுத்துதல், மிரட்டல் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here