கொரோனா நோய் தாக்கம் ஏற்பட்டால் காது கேட்கும் திறன் பாதிக்கப்படும் என்று அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. பலருக்கும் இந்த பக்க விளைவுகள் ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
உலக மக்கள் அனைவரையும் கொரோனா தொற்று அச்சுறுத்தி வருகின்றது. தற்போது உள்ள நிலவரப்படி உலகில் உள்ள 3 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயின் வீரியம் 14 நாட்களுக்கு தான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதற்கு பின், பாதிக்கப்பட்டவர் குணமாகி வீடு திரும்பலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது அதிர்ச்சி தரும் தகவலாக கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் காது கேட்கும் திறனையும் இழக்க நேரிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களின் “எழுச்சி தீபம்” அப்துல் கலாம் பிறந்த தினம் இன்று!!
கடந்த ஏப்ரல் மாதமே கொரோனா பாதித்த ஒருவருக்கு காது கேட்கும் திறன் குறைந்து இல்லாமல் போய் உள்ளது. ஆனால், அப்போது யாரும் அதனை கவனத்தில் கொள்ளவில்லை. லண்டன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் நிரந்தரமாக தனது காது கேட்கும் திறனை இழக்க நேரிடலாம் என்று அதிர்ச்சி தகவல் கூறப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் 45 மதிக்கத்தக்க ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவர்களின் கருத்து:
அதனால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சையின் போதே அவருக்கு இடது காதுகேட்கும் திறனை இழந்துள்ளது. தீவிர சிகிச்சைக்கு பின் அவருக்கு வலது காதும் கேட்காமல் போய் உள்ளது. இதனை ஆராய்ச்சி செய்து பார்த்தபோது அவருக்கு கொரோனாவால் தான் இவ்வாறு நடந்துள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
இது குறித்து மருத்துவர்கள் கூறியதாவது, “கொரோனா செல்கள் நுரையீரலின் மேற்பகுதியில் பல அடுக்குகள் கொண்ட செல்களை உருவாக்கி அலர்ஜியை ஏற்படுத்துகிறது. இது ஒரு காரணமாக இருந்தாலும் சிகிச்சையின் போது கொடுக்கப்படும் ஸ்டீராய்டு மருந்துகளால் கூட இவ்வாறு ஏற்படலாம். இது குறித்து நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்” இவ்வாறாக தெரிவித்துள்ளனர்.