மனைவியை 1 வருடத்திற்கு மேல் கழிவறையில் அடைத்து வைத்த கணவன் – ஹரியானாவில் அவலம்!!

0

ஹரியானாவில் 35 வயது பெண் ஒருவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தனது கணவரால் கழிவறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தகவலறிந்து அவரை மீட்ட அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் கொடூர கணவனை கைது செய்துள்ளனர்.

ஹரியானாவில் அவலம்:

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளைக்கு நாள் அதிகரித்து வருவது தேசிய குற்றப்பிரிவு ஆணையம் வெளியிட்டு உள்ள அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. இதற்காக காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் போதிலும், குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. ஹரியானா மாநிலத்தில் பெண் ஒருவர் அவரது கணவரால் 1 ஆண்டுக்கு மேல் சிறிய கழிவறையில் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட தகவல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

ஹரியானாவில் உள்ள ரிஸ்பூர் கிராமத்தை சேர்ந்த நரேஷ் குமார் என்பவருக்கும், அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. அவர்களுக்கு 15 வயது மகள் மற்றும் 11 மற்றும் 13 வயதுடைய இரண்டு மகன்கள் உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர். குமார் தனது மனைவிக்கு மனநல பிரச்சினைகள் இருப்பதாக கூறி வருகிறார். இதை ஒரு காரணமாக கூறி தனது மனைவியை கடந்த 1 ஆண்டுக்கு மேலாக வீட்டில் உள்ள சிறிய கழிவறையில் பூட்டி வைத்து சித்ரவதை செய்துள்ளார்.

உயிருடன் இருந்த அண்ணனை சவப்பெட்டிக்குள் வைத்த தம்பி – சாகும் வரை காத்திருந்த அவலம்!!

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் அதிகாரிகள் கழிப்பறைக்குள் பூட்டப்பட்டிருந்த பெண்ணை மீட்டனர். மிகவும் பரிதாபமான நிலையில் காணப்பட்ட அப்பெண் நடக்கக்கூட முடியாத அளவுக்கு பலவீனமாக இருந்தார். அவருக்கு சரியான உணவு, குடிநீர் வழங்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் அவரை மருத்துவமனையில் அனுமதித்த போலீசார் சிகிச்சை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக பெண்ணின் கணவர் நரேஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here