தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். சில மாதங்களாக இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் லாக்டவுன் சமயத்தில் திருமண நிச்சயதார்த்தத்தை முடித்த காஜல் அகர்வால் திருமண தேதியையும் அண்மையில் அறிவித்தார். தற்போது அவரது திருமணத்தில் சில மாற்றங்களும் ஏற்பட்டுள்ளது.
காஜல் அகர்வால்
தமிழில் பொம்மலாட்டம் படத்தின் மூலம் அறிமுகமானவர் காஜல் அகர்வால். இவர் இப்படத்தில் நாயகியாக நடித்திருந்தாலும், அந்த அளவிற்கு புகழ் கிடைக்கவில்லை என்றே சொல்லலாம். இவர் மாடலிங் துறையில் தான் முதன்முதலில் கால் பதித்தார்.
அதன் பிறகு பட வாய்ப்புகள் கிடைக்கவே இவர் திரையுலகில் அறிமுகமானார். இவர் தெலுங்கில் நடித்த பிருந்தாவனம் திரைப்படம் செம ஹிட் அடித்தது. அதன் பிறகு அவர் நடித்த மகதீரா திரைப்படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்து. இதனால் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது.
தமிழில் துப்பாக்கி, விவேகம், ஜில்லா போன்ற படங்களில் நடித்து மக்களிடையே நல்ல பெற்றார். சில வருடங்களாக மார்க்கெட் இல்லாமல் போன காஜல் அகர்வாலை ரசிகர்கள் பலர் எப்பொழுது திருமணம் என்று கேட்டுக் கொண்டே இருந்தனர். இந்நிலையில் அவருக்கு லாக்டவுன் சமயத்தில் ரகசியமாக திருமண நிச்சயம் நடந்துள்ளது.
அதன் புகைப்படமும் சில தினங்களுக்கு முன் வெளியானது. அக்டோபர் 30 இல் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் தற்போது திருமணத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதாவது காஜலுக்கு மும்பையில் உள்ள பெரிய நட்சத்திர ஹோட்டலில் திருமணத்தை வைக்க ஆசையாம். ஆனால் கொரோனா காரணமாக முடிவை மாற்றி மும்பையில் உள்ள அவரது வீட்டிலேயே எளிமையான முறையில் திருமணம் நடக்கவுள்ளதாம்.
மேலும் நடிகர், நடிகைகளின் அழைப்பையும் தவிர்த்துளார். நெருங்கிய உறவினர்களை மட்டுமே அழைத்து திருமணம் நடக்கவுள்ளதாம். சமூக இடைவெளியிடன், முகக்கவசம் அணிந்து இந்த திருமணத்திற்கு அனுமதிக்க உள்ளனராம். மேலும் வருபவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா?? என்றும் கொரோனா பரிசோதனையும் செய்ய உள்ளனராம்.