அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது வானிலை மையம்.
தமிழகத்தில் மழை:
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
வளிமண்டல சுழற்சி காரணமாக மதுரை, தேனி, நாமக்கல், திருப்பூர், கரூர், ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். மற்ற பகுதிகளில் மிதமான மழை பெய்யும். சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெப்பநிலை மற்றும் மழை பதிவு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பம் ,அதிகபட்சமாக எல்லா மாவட்டங்களிலும் 34 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மஞ்சளாறு பகுதியில் அதிகபட்சமாக 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது, அரண்மனைப்புதூர், முங்கில்துறைப்பட்டு, வீரபாண்டி பகுதிகளில் குறைந்தபட்சமாக 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதே போல் அரபி கடலில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.