தமிழகத்தில் இன்ஜினியரிங் மாணவர்கள் அரியர் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட முடிவினை ஏற்க முடியாது என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு (AICTE) முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் 7 லட்சம் அரியர் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
அரியர் தேர்வுகள் ரத்து:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்ததை தொடர்ந்து பல்கலைக்கழக மற்றும் கல்லூரி அரியர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தி உள்ள மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்து இருந்தார். இதனால் பல லட்சம் இன்ஜினியரிங், கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக முதல்வரை வாழ்த்தி போஸ்டர்கள், பேனர்கள் வைத்து மாணவர்கள் கொண்டாடினர். இந்நிலையில் 7 லட்சம் இன்ஜினியரிங் அரியர் மாணவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு (AICTE) அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
செப்.15 முதல் கல்லூரி இறுதிப்பருவ தேர்வுகள் – தமிழக உயர்கல்வித்துறை அறிவிப்பு!!
அதில் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு எடுத்துள்ள முடிவினை ஏற்க முடியாது என அக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. பல்கலைக்கழக இறுதியாண்டு தவிர அனைத்து அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக எடுக்கப்பட்டுள்ள அரசின் முடிவினை AICTE ஏற்க மறுத்து விட்டதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு AICTE கடிதம் எழுதி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.