தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வறண்ட வானிலை நிலவிவரும் நிலையில் தற்போது அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
மழைக்கு வாய்ப்பு:
தமிழகத்தை பொறுத்தவரை கடந்த அக்டோபர் மாதம் மூன்றாவது வாரம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. நிவர் மற்றும் புரவி என அடுத்தடுத்த இரண்டு புயல்கள் தாக்கியபின் ஒரு வாரமாக வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. தற்போது மீண்டும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,”தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 16.12.2020 மற்றும் 18.12.2020 ஆகிய நாட்களில் கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஓரிரு இடங்களில் கனமழையும் உள் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நாளை முதல் குற்றாலத்தில் பொதுமக்கள் குளிக்க அனுமதி!!
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்ஸியஸ் ஒட்டியும் இருக்கும். அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் பெருந்துறையில் 1 செ.மீ மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.