நடிகை மீரா மிதுன் நடிகர்களையும் அவர்களது குடும்பங்களையும் அவதூறாக பேசியதற்கு தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார் இயக்குனர், பாரதிராஜா.
நடிகையின் அவதூறு வார்த்தைகள்:
நடிகை மீரா மிதுன், கடந்த சில நாட்களாக நடிகர்கள் சூர்யா, விஜய் மற்றும் திரிஷா அவர்களது குடும்பங்களை பற்றி தவறாக அவதூறு பரப்பி வருகிறார். இதனால், அவர்களது ரசிகர்கள் கடுமையான கோவத்தில் உள்ளனர். பலரும் அவருக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளனர்.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
இதற்கிடையில், இயக்குனர் பாரதி ராஜா நடிகை மீரா மிதுனுக்கு எதிராக தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
அவதூறு பரப்ப வேண்டாம்:
அவர் கூறியதாவது ” நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய் குடும்பத்தின் மீது மீரா மிதுன் குற்றம் சாற்றியிருப்பது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவரகள் கவுரவமாக வாழ்ந்து வருகிறார்கள். புகழ் வில்லிச்சாம் தேடி இப்படி பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம். அழகிய ஓவியத்தின் மீது சேறடிப்பது போல் உள்ளது அவரது வார்த்தைகள்.
சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி – மாநில அரசு அதிர்ச்சி!!
நடிகர் சூர்யா கல்வி சேவைகளில் தன்னை ஆழ்த்தி வருகிறார், அதே போல் நடிகர் விஜயும் சத்தமில்லாமல் மனிதநேய செயல்களில் ஈடுபட்டு வருகிறார், அவர்களை இகழ்வது ஏற்புடையதல்ல. மற்றவர்களை தூற்றி கோட்டை காட்டாதீர்கள், அது கண்டிப்பாக மண்கோட்டையாக தான் இருக்கும்.
திரையுலகில் இருக்கும் மூத்த கலைஞனாக நான் இதனை கண்டிக்க விழைகிறேன். சங்கத்தில் இருந்து கூட கண்டனம் வராதது வருத்தம் அளிக்கிறது. ” என்று தெரிவித்துள்ளார்.