சரவணன் சந்தியா ஒற்றுமையை பார்த்து பாரதியை குத்திக்காட்டும் அகிலன் – மனம் மாறுவாரா??

0

வெண்பா மற்றும் பார்வதியின் சதியால் சரவணனும் சந்தியாவும் போட்டியிலிருந்து துரத்தப்படுகிறார்கள். பிறகு பார்வதி, சந்தியாவின் பையில் கொஸ்டின் பேப்பர் வைத்த வீடியோ பாரதிக்கு கிடைக்கிறது. இதை வைத்து சந்தியா காப்பாற்றப்படுவாரா, இல்லையா என ஒளிபரப்பாக உள்ளது இன்றைய தொடர்.

மெகா சங்கமம்

இன்றைய சிறப்பு தொடரில் போட்டி முடிந்ததும், சந்தியா போட்டியில் நன்றாக விளையாடியதற்காக எல்லாரும் வாழ்த்து சொல்லுகிறார்கள். இரண்டு குடும்பமும் பேசிக்கொண்டிருக்கும் போது போட்டி நடத்துபவர்கள் வந்து சந்தியாவின் பையை செக் பண்ணனும் என சொல்லுகிறார்கள். பையை செக் செய்தபோது கேள்வி பேப்பர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நீங்க கொஸ்டின் பேப்பர திருடி தான் இந்த போட்டியில ஜெயிச்சிருக்கீங்க என கூறி சந்தியாவை போட்டியிலிருந்து நீக்கி விடுகிறார்கள். அப்போது அங்கு வரும் பாரதியும், சௌந்தர்யாவும் சந்தியாவிற்கு சப்போர்ட் செய்து பேசுகிறார்கள். இதுக்கு நாங்க என்ன செய்யணும்னு தெரியும் என கூறிவிட்டு போட்டி நடத்துபவர்கள் அங்கிருந்து கிளம்புகிறார்கள்.

பிறகு பார்வதி, ஆதி எல்லாரும் சேர்ந்து சந்தியாவை திட்டுகிறார்கள். உங்களால நாங்க தலை குனிஞ்சு நிக்கிறோம் என பார்வதி சந்தியாவை திட்டிக்கொண்டே இருக்கிறார். அப்போது, மெட்ராஸ்ல இருந்து வந்த அந்த டாக்டர் குடும்பம் கூட சந்தியாவிற்கு சப்போர்ட் செய்து பேசுகிறார்கள்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

நீங்க இன்னமும் சந்தியாவை புரியாமல் நடந்துக்குறீங்க என சரவணன் கூறுகிறார். பிறகு நடந்த சம்பவத்தால் மாமா கூட என்ன சந்தேகப்பட்டுட்டாரே என சந்தியா வருந்துகிறார். என்ன நடந்தாலும் நான் உங்களை நம்புறேன் என சரவணன் சந்தியாவை ஆறுதல் படுத்துகிறார்.

போட்டியில் நடந்தவற்றை பற்றி சௌந்தர்யாவிடம் பேசுகிறார் சரவணனின் அப்பா. பிறகு நீங்க கடைசி வரை போட்டியில நிப்பீங்கன்னு நெனச்சேன் இப்படி ஆச்சே என பாரதி சரவணனிடம் கூறுகிறார். நீங்க உங்க மனைவியை இவ்வளோ நம்புறீங்க, உங்களுக்குள்ள இருக்க இந்த புரிதலை மட்டும் விட்டுடாதீங்க என சரவணனுக்கு பாரதி அட்வைஸ் செய்கிறார்.

சரவணனுக்கு அட்வைஸ் செய்ததை பார்த்து கொண்டிருந்த அகில் பாரதியை கலாய்க்கிறார். இதே மாதிரி பிரச்சனை உனக்கும் கண்ணம்மா அண்ணிக்கும் நடந்தது, சரவணன் மனைவி சந்தியா தப்பு பண்ணிருக்க மாட்டாங்க என சொல்ற நீ கண்ணம்மா அண்ணி விசயத்துல நீ அப்படி நெனைக்கலையே என அகில் கூற பாரதி கோவப்படுகிறார்.

பின்பு நாங்க போட்டியிலிருந்து விலகுனதுனால வீட்டுக்கு கிளம்புகிறோம் என கண்ணம்மாவிடம் கூறி வருத்தப்படுகிறார் சந்தியா. சந்தியாவிற்கு அட்வைஸ் செய்து அனுப்புகிறார் கண்ணம்மா. பிறகு தாங்கள் போட்ட திட்டத்தால் சந்தியாவை போட்டியிலிருந்து விரட்டியதற்காக சந்தோசப்படுகிறார்கள் பார்வதியும், வெண்பாவும்.

பிறகு ஸ்விம்மிங் பூல் அருகே உட்கார்ந்திருக்கும் பாரதியிடம் வரும் லட்சுமி, பார்வதி, சந்தியா பையில் கொஸ்டின் பேப்பர் வைத்த வீடியோவை பாரதியிடம் காட்டுகிறார். உண்மை தெரிந்த பாரதி சந்தியாவை காப்பாற்றுவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here