‘அப்பாடா ஒருவழியா கூடிடுச்சு’ – இன்றைய பங்குச்சந்தை நிலவரம்!!

0

கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை வணிகம் மிக சரிவுடன் தான் துவங்கி நடைபெற்று வந்தது. தற்போது இன்றைய நிலவரப்படி பங்குச்சந்தை நிலவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பங்குச்சந்தை:

கடந்த ஆண்டு இறுதியில் இந்தியா கொரோனாவில் இருந்து எப்படி மீண்டதோ அதே மாதிரி பங்குசந்தையும் வீழ்ச்சியில் இருந்து மீள தொடங்கியது. ஆனால் தற்போது யாரும் எதிர்பாராத வகையில் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மீண்டும் ஊரடங்கு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு ஏற்பட்டால் நாட்டின் பொருளாதாரம் மோசமான வீழ்ச்சியை சந்திக்கும். தற்போது இன்றைய நிலவரப்படி பங்குச்சந்தை வணிகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் ஒரே நாளில் 59,118 பேருக்கு கொரோனா – மத்திய சுகாதாரத்துறை தகவல்!!

அதன்படி கடந்த சில நாட்களாகவே சரிவுடன் துவங்கிய பங்குச்சந்தை இன்று உயர்வுடன் துவங்கியுள்ளது. அதன்படி மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் சுமார் 475 புள்ளிகள் உயர்ந்து 48,896 புள்ளிகளுடன் வர்த்தகத்தை துவங்கியது. இந்த உயர்வு மொத்த வர்த்தகத்தில் 0.94% உயர்வாகும். ஆனால் தேசிய வர்த்தக குறியீட்டு எண் நிஃப்டி 152.05 புள்ளிகள் சரிந்து 14,499.35 புள்ளிகளுடன் வர்த்தகத்தை துவங்கியது. சென்செக்ஸ் புள்ளி பட்டியலில் முதல் 30 இடங்களில் உள்ள நிறுவனங்களின் பங்குகள் நேர்மறையாக உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here