இந்தியாவில் ஒரே நாளில் 59,118 பேருக்கு கொரோனா – மத்திய சுகாதாரத்துறை தகவல்!!

0

இந்தியாவில் சமீப நாட்களாக அதிகமாக பரவி வருகிறது கொரோனா வைரஸ். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனவால் 59,118 பேர் பாதிப்படைந்துள்ளனர். இதனை மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று:

இந்தியாவில் கொரோனா வேகம் எடுத்து வருவதால் அனைத்து இடங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் பல லட்ச பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இருந்தும் கூட நாட்டில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் கவலை அடைந்து வருகின்றனர். மேலும் நாட்டில் சில மாநிலங்களில் தற்போது ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 59,118 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 1,18,46,652 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனவால் 257 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 1,60,949 பேர் உயிரிழந்துள்ளனர். இதுபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 32,987 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

இதனால் நாட்டில் கொரோனாவால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,12,64,637 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா வைரசலால் தாக்கப்பட்டு நாட்டில் 4,21,066 பேர் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நேரத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பது சற்று கவலைக்குரியதே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here