ஹவுஸ் ஓனரின் உண்மை முகம் தெரியாமல் சிக்கிக்கொள்ளும் கண்ணம்மா – சூடுபிடிக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் வேணுவிற்கு அடிபட்டிருந்ததை அடுத்து கண்ணம்மா அவரை காப்பாற்ற பாரதியும் கண்ணம்மாவும் பார்த்துக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. வேணுவும் எவ்வளவோ கெஞ்ச கண்ணம்மா வர மறுக்கிறார். இன்றைய எபிசோடில் சௌந்தர்யாவிற்கும் உண்மை தெரிகிறது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் ஹாஸ்பிடலில் இருந்து வேணு டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வருகிறார். வரும் வழியில் வேணுவும் பாரதியை கண்டபடி பேசி விடுகிறார். வீட்டிற்கு வரும் வேணுவை பார்த்து சௌந்தர்யா பதட்டமடைகிறார். மேலும் வேணு கண்ணம்மா தன்னை காப்பாற்றியது பற்றி சொல்ல சௌந்தர்யா, அகிலன் சந்தோஷமடைகின்றனர்.

கண்ணம்மா எங்கே இருக்கிறார். அவளை ஏன் இன்னும் கூட்டிட்டு வரல என்று கதறுகிறார் சௌந்தர்யா. அங்கு நடந்தவற்றை சொல்ல சௌந்தர்யாவிற்கு பாரதி மீது கோவம் வருகிறது. விபத்து நடந்த இடத்தை பற்றி அகிலன் விசாரிக்கிறார். அடுத்ததாக வெண்பாவை காட்டுகின்றனர். வெண்பா டாக்டர் கவுன்சிலுக்கு கால் செய்து துர்கா பற்றி கம்பளைண்ட் செய்கிறார்.

அவர்களும் கிளம்பி ஹாஸ்பிடலுக்கு வர விஷயம் தெரிந்த துர்கா உஷாராகிறார். மேலும் அதற்குள் இன்னொரு மருத்துவரை அழைத்து துர்கா நோயாளி போல நடிக்கிறார். இதனை பார்த்த அந்த மெடிக்கல் கவுன்சிலும் நம்பி வெண்பாவை திட்ட்டி விட்டு செல்கின்றனர்.

அடுத்ததாக கண்ணம்மாவை காட்ட லட்சுமி துளசியிடம் பல டவுட்டுகளை கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் கண்ணம்மாவோ ஏதோ ஒரு நினைப்பில் உள்ளார். அடுத்ததாக குடியிருக்கும் ஹவுஸ் ஓனர்மனைவியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வருகிறார். தனது மனைவியை ஜீன்ஸ் அணிய சொல்லி கண்ணம்மாவிடம் சொல்லுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கண்ணம்மாவும் துளசியும் வற்புறுத்தவே ஹவுஸ் ஓனர் மனைவியும் ஜீன்ஸ் அணிந்துகொண்டு வருகிறார். இப்படியே சந்தோசமாக போயிக்கொண்டுள்ளது. ஆனால் இப்படி ஹவுஸ் ஓனர் இனிக்க இனிக்க பேசுவது தான் பெரிய டவுட்டே. ஆனால் துளசிக்கு இது சந்தேகத்தை எழுப்பினாலும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிக்கிய ஹெரன் பாலுக்கு சிபிஐ காவல் – கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவு!!

மேலும் இருவரும் வீட்டிற்கு சென்று விட அப்பொழுது தான் அந்த ஹவுஸ் ஓனரின் உண்மை முகமே தெரிகிறது. அவரது மனைவியை அழைத்து வந்து நான் சொன்ன ஜீன்ஸ் போற்றுவியா?? எவனை மயக்க இப்படி டிரஸ் போட்ருக்க என்று கேட்க அவரது மனைவி கதறி அழுகிறார். இதனை வைத்து பார்க்கும்போது கண்ணம்மாவிற்கு இவரால் இன்னும் என்னென்ன பிரச்சனைகள் வர போகிறது என்று தான் தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here