பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான மூன்று பேரில் ஹெரான் பால் என்பவரை 2 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ கோரிய மனுவை ஏற்று கோவை மகளிர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
சிபிஐ காவல்
கடந்த 2018 ம் ஆண்டு பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை வழக்கின் கீழ் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அருளானந்தம், பாபு, ஹெரன் பால் ஆகியோரை இரண்டு வருடங்களுக்கு பின்பு கடந்த வாரம் சிபிஐ அதிரடியாக கைது செய்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தொடர்ச்சியாக சரிவை காணும் தங்கத்தின் விலை – நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!!
இந்நிலையில் இவர்கள் மூவரில் ஹெரன் பால் என்பவரை ஐந்து நாட்கள் சிபிஐ விசாரணையில் வைத்து விசாரிக்க சிபிஐ சார்பாக கோவை மகளிர் நீதிமன்றத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டது. இந்த மனு விசாரணையின் போது ஹெரன் பால் என்பவரை 2 நாட்கள் மட்டும் சிபிஐ காவலின் கீழ் வைத்து விசாரிக்க அனுமதியளித்துள்ளது.