‘இந்த 3 மாவட்டங்களில் இடியுடன் கனமழை வெளுத்து வாங்கும்’ – வானிலை மையம் தகவல்!!

0

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இடியுடன்  கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

வானிலை தகவல்:

இலங்கை மற்றும் குமரிக்கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக  அடுத்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மேலும் தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் மேலும் கடலூர், விழுப்புறம், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வரும் 12.02.21 அன்று தென்தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனீ,திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும். மேலும் மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் ஏனைய மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும்.

13.01.21 தெந்தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழையும் மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கணன மழையும் ஏனைய மாவட்டங்களில் வானம் வறண்ட வானிலையாகவும் நிலவும். 14.01.21 மற்றும் 15.01.21 அன்று தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.

மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து சேவை – முதல்வர் துவக்கி வைப்பு!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைபெய்யும். அதிகபட்சமாக 30 டிகிரியும் குறைந்த பட்சமாக 24 டிகிரி செல்சியசும் வெப்பநிலை நிகழும்.

கடந்த 24 மணி நேரத்தில் மலை பதிவான அளவு:

தமிழகம் மற்றும் புதுவை ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக புவனகிரி 11மிமீ , பரங்கிப்பேட்டை 9 மிமீ, ராமநாதபுரம், குடவாசல் தலா 6, ராமேஸ்வரம், கொள்ளிடம், தலா 5, மணமேல்குடி, முத்துப்பேட்டை, சூரன்குடி, அறந்தாங்கி, அய்யம்பேட்டை தலா 4, சிதம்பரம், வாலிநோக்கம், கும்பகோணம், ஜெயம்கொண்டான், மணல்மேடு, சேரன்மகாதேவி தலா 3 மிமீ மழை பெய்துள்ளது.

வரும் ஜனவரி 11 மற்றும் 12ம் தேதிகளில் குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி கற்று மணிக்கு 45 முதல் 55கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஜனவரி மாதம் 12 மற்றும் 13ம் தேதிகளில் கேரளா கடலோர பகுதி மற்றும் அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் எனவே மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை மையம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here