சிகிச்சைக்காக லட்சுமியுடன் சென்னைக்கு செல்லும் கண்ணம்மா – பாரதியை பார்ப்பாரா?? விறுவிறுப்பான கதைக்களத்துடன் ‘பாரதி கண்ணம்மா’!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் இத்தனை வருடங்கள் கடந்த பின்னும் பாரதிக்கு கண்ணம்மா பற்றிய உண்மைகள் எப்பொழுது தெரியவரும் என்பது தெரியவில்லை. இந்நிலையில் கண்ணம்மா அவரின் சிகிச்சைக்காக சென்னை வருவதற்கு ஒத்துக் கொள்கிறார். அங்கு பாரதியை பார்ப்பாரா?? மாட்டாரா?? என்பதே இன்றைய எபிசோடாக உள்ளது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது தொடர்ந்து பல ட்விஸ்டுகளை வைத்து வருகிறார் டைரக்டர். முந்தைய எபிசோடில் யாரும் எதிர்ப்பாராத விதமாக துர்கா டாக்டராக வந்தார். இதனால் ஷாக் ஆனாது நாம் மட்டுமில்லை வெண்பாவும் தான். வெண்பாவிற்கு இனிமேல் தான் அடுத்தடுத்த அடி உள்ளது தெரிகிறது. ஏற்கனவே பாரதியின் பின்னால் சுற்றி ஹாஸ்பிடலை கோட்டை விட்டார். மேலும் லட்சுமி பிடிவாதத்தால் கண்ணம்மாவும் சென்னைக்கு வருவதற்கு ஒத்துக்கொள்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சௌந்தர்யா வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஹேமா அஞ்சலியை ஊட்டிவிட சொல்ல அஞ்சலி ஹேமாவை கண்டபடி பேசுகிறார். இதனை சௌந்தர்யாவும் கேட்டு விடுகிறார். இதனால் கோவமடையும் சௌந்தர்யா இப்படி குழந்தைக்கிட்ட கேவலமா நடந்துகிறாள உனக்கு தான் கெட்ட எண்ணம் என்று சொல்ல அதற்கு அஞ்சலி இந்த வீட்டில் எனக்கு என்ன மரியாதை இருக்கு.

ஒரு மருமகளா என்ன எப்படி நடத்துறீங்க, கண்ணம்மா இருந்தவரைக்கும் அவளுக்கு என்ன வேலைக்காரியா வச்சு இருந்திங்க. இப்போ இந்த ஹேமா, என்ன பாத்த உங்களுக்கு எப்படி இருக்கு என்று ஆவேசமடைகிறார். அதற்கு சௌந்தர்யா நீ நடந்துக்கற விதத்துல மதிப்பு தானா வரும், எதையும் கேட்டு வாங்கக் கூடாதுனு கூலாக பதில் சொல்கிறார்.

கே.ஜி.எஃப் 2 திரைப்பட டீஸர் தேதியை வெளியிட்ட படக்குழு!!

இதனால் கோபமடையும் அஞ்சலி நான் எதுவும் வேற ஒருத்தனை தேடி போகலைல என்று சொல்ல சௌந்தர்யா கத்துகிறார். அடுத்ததாக கண்ணம்மாவை காட்ட சென்னைக்கு கிளம்பிக் கொண்டுள்ளனர். அப்பொழுது சங்கீதா வர கொஞ்சம் பணத்தை கொடுத்து வைத்துக்கொள்ள சொல்கிறார். கண்ணம்மா வாங்க மறுக்க இது உன்னுடைய பணம் தான் இத்தனை நாட்கள் எனக்கும் என் கணவருக்கும் நீ டிரஸ் தச்சு கொடுத்தது அப்பறம் உன்கிட்ட கடன் வாங்கின காசு தான் இது என்று சொல்ல கண்ணம்மாவும் வாங்கிக் கொள்கிறார்.

இருவரும் சென்னை வந்து சேர ஹாஸ்பிடலை வந்தடைகின்றனர். கண்ணம்மா பாரதியை பார்த்து விடுகிறார். லட்சுமி இறங்கி சென்று விசாரிக்க போக என்ன நடக்கப் போகிறதோ?? என பதறிக்கொண்டுள்ளார். இதோடு எபிசோடு முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here