மக்களுக்கு ஷாக் கொடுத்த தங்க விலை – சவரன் 38 ஆயிரத்தை தொட்டது!!

0

சென்னையில் தங்க விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகின்றது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் கவலை அடைந்துள்ளனர். அதேபோல் சுப நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டிருந்தவர்கள் நகையினை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டு விடுமோ என்று அச்சமும் அடைந்துள்ளனர்.

தங்கம் என்னும் பொக்கிஷம்:

தங்கத்தில் போடும் பணம் வீணாகாது என்று ஒரு நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது. இப்படியான தங்க விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கடந்த ஒரு வாரமாகவே தங்க விலை உச்சத்தை அடைந்து தான் வருகின்றது. வாரத்தின் முதல் நாளான இன்று சவரனுக்கு 200 ரூபாய்க்கு அதிகமாக உயர்ந்துள்ளது.

இன்றைய தங்க விலை நிலவரம்:

இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 272 ரூபாய் உயர்ந்து ரூ.38,224க்கும், ஒரு கிராம் தங்கம் 34 ரூபாய் உயர்ந்து ரூ.4, 778 என்ற விலையில் விற்கப்படுகிறது. தூய தங்கம் ஒரு சவரன் ரூ.41,296 என்ற விலைக்கும் ஒரு கிராம் 5,162 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தங்கத்தின் விலை தான் இப்படி என்றால் வெள்ளி ஒரு கிராமிற்கு 2.60 காசுகள் உயர்ந்து ரூ.74.10 என்று விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ ரூ.74,100 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here