நீதிமன்றத்தை அவமதித்த வழக்கில் அபராதம் விதிக்கப்பட்ட வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் அபராத தொகையை செலுத்தி உள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு:
கடந்த சில நாட்களுக்கு முன் உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான பிரஷாந்த் பூஷன் நீதிமன்றத்தையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளையும் அவமதித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார். இதனால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றம் சார்பில் வழக்கு விசாரிக்கப்பட்டது. அதில் இவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இரண்டு முறை கூறப்பட்டது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இவர் மறுத்திருந்தார். இந்த வழக்கை ஒத்தி வைத்த நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருந்தது. அதில் கூறப்பட்டது “வரும் 15 ஆம் தேதிக்குள் 1 ரூபாய் அபராத கட்டணமாக செலுத்தப்பட வேண்டும் என்றும் அதனை மறுத்தால் 3 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்” என்று கூறப்பட்டது.
அபராத தொகை “பைட்”:
இதனை தொடர்ந்து பிரசாத் பூஷன் தந்து ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது “நான் நீதிமன்றத்தை அவமதிக்க விரும்பவில்லை. எனது நண்பரும் மூத்த வழக்கறிஞருமான ராஜிவ் தவான் நான் கட்டவேண்டிய அபராத தொகையை தந்துள்ளார். என்னால் ஒரு போதும் மன்னிப்பு கேட்க முடியாது.” என்றும் கூறியுள்ளார்.
தனியார் பேருந்துகள் நாளை இயங்காது – பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!!
My lawyer & senior colleague Rajiv Dhavan contributed 1 Re immediately after the contempt judgement today which I gratefully accepted pic.twitter.com/vVXmzPe4ss
— Prashant Bhushan (@pbhushan1) August 31, 2020
இதற்கு கடந்த சில நாட்களுக்கு முன் நீதிபதி அருண் மிஸ்ரா கூறியதாவது “ஒருவரை காயப்படுத்தும் போது அதற்கு மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு உள்ளது. நான் இன்னும் சில நாட்களில் ஓய்வு பெறப்போகிறேன் அப்போதும் இது போல் நீங்கள் என்னை காயப்படுத்துவீர்களா??” என்று கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.