ஊரடங்கின் போது விஜய்யின் திரைப்படங்கள் அதிக டிஆர்பியை பெற்றதாகக் கூறும் ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா பொது முடக்கம்:
கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் கடந்த 4 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் சினிமா, சீரியல் படப்பிடிப்புகள் மற்றும் புதுப்பட ரிலீஸ் என எதுவுமே இல்லை.டிவி சேனல்கள் அனைத்தும் பழைய திரைப்படங்களை ஒளிபரப்புவதில் கவனம் செலுத்தியது.
விஜய் முதலிடம்:
தற்போது நடிகர் விஜய்யின் திரைப்படங்கள் அதிக டிஆர்பியை பெற்றதாக வலைதளங்களில் தகவல்பரவி வருகிறது. ஊடகங்களும் ரசிகர்களும் இது ஒரு அதிகாரப்பூர்வமான தகவல் என்று நினைத்தார்கள்.
“கனெக்டிவிட்டி கோளாறை சரி செய்ய முயற்சிப்போம்” – மைக்ரோசாப்ட்..!!
போலியான தகவல்:
இந்தப் பட்டியல் போலியானவை என்று பிராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்சில் ஆஃப் இந்தியா (BARC) கூறியுள்ளது. இதுகுறித்து பார்க் கூறுகையில் “பார்க் இந்தியாவின் சின்னத்தைப் பயன்படுத்தி மக்கள் தவறான தகவலை வெளியிடுகிறார்கள் என்பது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இது குற்றமாகும். தயவுசெய்து பார்க் இந்தியா வெளியிடும் அதிகாரப்பூர்வ தகவல்களை பார்க்கவும் என தெரிவித்துள்ளது.