தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில் “தளபதி” விஜய் தனது இல்லத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது பரபரப்பாக பேசப்படுகிறது. இதன் மூலமாக அவர் இந்த தேர்தலில் போட்டியிடுவாரா? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.
“தளபதி” விஜய்:
தமிழ் திரையுலகில் தற்போது உச்சகட்ட முன்னணி நடிகராக இருப்பவர், விஜய். பிரபல இயக்குனரான எஸ்.சந்திரசேகரின் மகன். தமிழ் திரையுலகில் ஆரம்ப காலத்தில் சாக்லேட் பாயாக அறிமுகமாகி தனது கடின முயற்சி மூலமாக தற்போது சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
வருடத்திற்கு ஒரு படத்தில் மட்டுமே நடிக்கும் அவர் மக்களுக்கு சமூக கருத்துக்களை கொண்டு சேர்க்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளார். கடந்த சில வருடங்களாக வெளிவரும் அவரது படங்கள் அனைத்தும் அரசியல் சம்பந்தமான படங்களாக தான் உள்ளது.
அப்படி இல்லையென்றாலும் கூட அவரது படங்களில் அரசியல் பிரமுகர்களை சீண்டும் வகையிலும் வசனங்கள் இருக்கும். உதாரணமாக, மெர்சல், சர்கார் போன்ற படங்களை கூறலாம். அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை புரிவார் என்று அவரது தந்தை பல பேட்டிகளில் கூட கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் அவரது தந்தை எஸ்.சந்திரசேகர் தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியில் இணையப் போவதாக செய்திகள் வெளிவந்தன. அதனை சந்திரசேகர் திட்டவட்டமாக மறுத்திருந்தார். கூடுதலாக, எக்காரணம் கொண்டும் தான் மற்ற கட்சியில் இணைய மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை:
இப்படியான பரபரப்பான சுழலில் தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் நடைபெற உள்ளது. திரையுலக நடிகர்களான கமல் மற்றும் ரஜினி இந்த தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று நம்பப்படுகிறது. நடிகர் கமல் தனது கட்சி பணிகளில் ஏற்கனவே ஈடுபட ஆரம்பித்து விட்டார். நடிகர் ரஜினி கூடிய விரைவில் தனது கட்சி கூறிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் நம்பப்படுகிறது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
இப்படியான சூழ்நிலையில், நடிகர் விஜய் சென்னை பனையூர் அருகே உள்ள தனது வீட்டில் “விஜய் மக்கள் இயக்கம்” நிர்வாகிகளுடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். திருச்சி வடக்கு மற்றும் தெற்கு மதுரை வடக்கு மற்றும் தெற்கு நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
இந்த பேச்சுவார்த்தையில் அவர் கூறியிருப்பதாவது “மக்களுக்கு தொடர்ந்து சேவைகளை செய்யுங்கள். கடன் வாங்காமல் உதவி செய்யுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
தேர்தல் சுழலில் இப்படி பேச்சுவார்த்தை நடந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் “விஜய் மக்கள் இயக்கம்” அரசியல் கட்சியாக உருவெடுக்கும் என்று அவரது தந்தை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.