மயக்க நிலையில் கண்ணம்மா – சௌந்தர்யா எடுக்கும் விபரீத முடிவு!! அனல் பறக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!!

0
barathi kannama

தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் பல விறுவிறுப்பான கட்டங்களுடன் ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. எப்படியோ மக்கள் எதிர்பார்த்தபடி கண்ணம்மாவிற்கு நல்ல படியாக குழந்தை பிறந்தது. இன்றைய எபிசோடில் சௌந்தர்யா ஒரு விபரீத முடிவை எடுக்கிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவிற்கு நேற்றைய எபிசோடில் குழந்தை பிறந்தது. அதுவும் பாரதி பிரசவம் பார்த்தது சீரியலில் ஒரு பெரிய ட்விஸ்டாக அமைந்தது. மேலும் குழந்தையை பார்த்த பாரதிக்கு தன் குழந்தை என்ற உணர்வு வரவே கண்கலங்கினார். ஆனால் கண்ணம்மாவை நினைத்து கோவம் கொள்ளும் பாரதி இது தன் குழந்தை அல்ல என்று நினைத்து நர்ஸ் இடம் குழந்தையை கொடுத்து விட்டு வெளியேறுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

barathi kannama

அப்பொழுது ஹாஸ்பிடலுக்கு வரும் சௌந்தர்யாவிற்கு குழந்தை பிறந்த விஷயம் தெரிந்து சந்தோஷமடைகிறார். அங்கிருக்கும் நர்ஸ் குழந்தையை சௌந்தர்யாவிடம் காட்டுகிறார். அகிலும், சௌந்தர்யாவும் குழந்தையை கொஞ்சுகின்றனர். அப்பொழுது திடீரென கண்ணம்மாவிற்கு மறுபடியும் பிரசவ வலி ஏற்படுகிறது. சௌந்தர்யாவும் உள்ளே வர அவருக்கு இன்னொரு பெண் குழந்தை பிறக்கிறது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

barathi kannama

இன்றைய எபிசோடில் வெண்பாவை கடத்தி செல்லும் துர்கா இடையில் போலீஸ் நிற்க மாட்டிக்கொள்கிறார். மேலும் வெண்பா, கண்ணம்மாவை கொல்ல நினைத்ததையும் தான் சென்று அவரை காப்பாற்றியதையும் கூறுகிறார். ஆனால் போலீசார் அதனை நம்ப மறுத்து அவரை கைது செய்கின்றனர். அதோடு ஹாஸ்பிட்டலில் சில விஷயங்களை காட்டுகின்றனர். அதாவது சௌந்தர்யா இரட்டை பெண் குழந்தை பிறந்ததை நினைத்து சந்தோஷமடைகிறார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

barathi kannama

மேலும் தன் வீட்டிற்கு மஹாலக்ஷ்மியே வந்து விட்டது என்று கூறுகிறார்.  சௌந்தர்யா அகிலனிடம் ஒரு குழந்தையை நாம் எடுத்துக் கொள்வோம் இது கண்ணம்மாவிற்கு தெரிய வேண்டாம் என்று சொல்ல அகிலன் அதிர்ச்சியடைகிறார். தாயிடம் இருந்து குழந்தையை பிரிப்பது தவறு என்று கூறுகிறார்.

barathi kannama

ஆனால் சௌந்தர்யா கேட்பதாக இல்லை. இரண்டு குழந்தையையும் கண்ணம்மாவால் தனியாக வளர்க்க முடியாது, இந்த குழந்தையை நாம் வைத்துக் கொள்வோம். மேலும் பாரதிக்கு கண்ணம்மா பற்றிய உண்மை அப்பொழுது தான் தெரிய வரும் என்று கூறுகிறார். அகிலனும் இதற்கு ஒத்துக் கொள்கிறார். அங்கு இருக்கும் நர்ஸ் இடம் நடந்தவற்றை கூறி கெஞ்சுகிறார்.

barathi kannama

அதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது. இதனை வைத்து பார்க்கும்போது பாரதிக்கு கூடிய விரைவில் உண்மை தெரிய வர வாய்ப்புள்ளது. மேலும் கண்ணம்மா கண் விழித்ததும் வெண்பா பற்றிய உண்மையை சௌந்தர்யாவிடம் சொல்ல அதிக வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here