சென்னையில் கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் சரிந்துள்ளது பொதுமக்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தற்போது பண்டிகை காலமும் நெருங்கி வருவதால் நகைக்கடைகளில் கூட்டம் அதிகரித்து வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய நிலவரம்:
கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பிற துறைகளில் சரிவு ஏற்பட்டது. இதனால் தங்கம் போன்ற பாதுகாப்பான முதலீடுகள் மீது முதலீட்டாளர்களின் கவனம் அதிகரித்த காரணத்தால் விலை பன்மடங்கு உயர்ந்தது. மேலை நாடுகளில் வெறும் முதலீட்டு பொருளாகவே பார்க்கப்படும் தங்கம், இந்தியாவில் தான் ஆபரணமாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்திய மக்களுக்கு தங்கத்தின் மீது தனி மோகம் உள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
எந்த ஒரு சுப நிகழ்ச்சியும் தங்க நகைகள் இன்றி நிறைவு பெறாது. இம்முறை ஊரடங்கு காரணாமாக அட்சய திருதியை அன்று கூட நகைக்கடைகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் வாயிலாக வியாபாரம் நடைபெற்றது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளதால், பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. இதனால் தங்கத்தின் விலையும் சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வருகிறது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) 24 ரூபாய் சரிந்து ரூ.4700க்கும், ஒரு சவரன் 192 ரூபாய் குறைந்து ரூ.37,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராம் 30 பைசா குறைந்து 67 ரூபாயாகவும், ஒரு கிலோ ரூ.67,000 ஆகவும் உள்ளது.