‘சும்மா இருக்குறது எவ்வளவு கஷ்டம்’ – அன்றே கணித்தார் வடிவேலு!!

0

தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையின் தீவிரம் காரணமாக முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையை நினைத்து பார்த்தால் அப்போது வடிவேல் சொன்ன வசனம் தான் அனைவரின் நினைவிற்கும் வந்து செல்கிறது.

வடிவேலு:

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நாயகன் யார் என்றால் வடிவேலு தான். தொடக்க காலம் முதல் தற்போது வரை இவரது நகைச்சுவையை கண்டால் அனைத்து வயதினரும் வயிறு குலுங்க சிரித்து வருவர். மேலும் இவரது நகைச்சுவை யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருக்கும். தற்போது இவர் சினிமாவில் நடிப்பதில்லை என்றாலும் இவரது பெருமை இன்றும் நிலைத்து நிற்கிறது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இவர் கடைசியாக தளபதி விஜயின் மெர்சல் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் இவரை நடிக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இவரின் முகம் மற்றும் வசனம் தான் மீம் கிரியேட்டர்ஸ்களுக்கு தக்க உதவிகரமாக இருந்து வருகிறது. அனைத்து வகையான மீம்ஸ்களுக்கும் பொருந்தும் ஒரே முகம் எது என்றால் அது வடிவேலு தான்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

லாக்டவுனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு வந்த சோதனை – கவலையில் ரசிகர்கள்!!

தற்போது தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை காரணமாக முழு ஊரடங்கு நடவடிக்கை அமலில் இருந்து வருகிறது. தற்போது இதுகுறித்து வடிவேலு நகைச்சுவையாக கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, நான் எனது படத்தில் நகைச்சுவையாக, சும்மா இருக்குறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா’ என்று கூறினேன். ஆனால் அதுவே தற்போது நாட்டின் நிலையாக இருந்து வருகிறது என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here