விஜய் டிவியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிளாஷ் பேக் சீன்கள் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது. லாக்டவுன் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது என்று ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் பிளாஷ் பேக்
கொரோனா காரணமாக தற்போது தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் நாளுக்கு நாள் இந்த கொரோனாவின் இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. இதனால் பல உயிரிழப்புகளையும் சந்தித்து வருகிறோம். கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிக வீரியத்துடன் இந்த கொரோனா தொற்று வேகமெடுத்துள்ளது.
இந்நிலையில் போடப்பட்ட ஊரடங்கால் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சின்னத்திரையில் ஏற்கனவே எடுக்கப்பட்ட காட்சிகள் தான் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த லாக்டவுன் 24 உடன் முடிவடையுமா?? அல்லது நீடிக்கப்படுமா?? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதனால் சீரியல்கள் 20 நிமிடங்கள் மட்டும் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் சில சீரியல்கள் நிறுத்தப்பட்டும் உள்ளன.
அப்படி இருக்க பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் எபிசோடுகளுக்கு தட்டுப்பாடு வந்து விட கூடாது என்பதற்காக மாஸ்டர் பிளானாக பிளாஷ் பேக் சீன்கள் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது. வரும் 25 ஆம் தேதி செவ்வாயில் தொடங்கி வெள்ளிவரை 7.30 மணியிலிருந்து 8.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது.