தமிழகத்தில் உயிர்த்தெழும் டெங்கு காய்ச்சல்.. 3 நாளில் 30 பேர் பாதிப்பு.. நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்!!

0
தமிழகத்தில் உயிர்த்தெழும் டெங்கு காய்ச்சல்.. 3 நாளில் 30 பேர் பாதிப்பு.. நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்!!
தமிழகத்தில் கத்திரி வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, வீடு, சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்கிய நிலையில் இருக்கிறது. மேலும் தேங்காய் மட்டை, சிரட்டை, பிளாஸ்டிக் பாட்டில்களில் நல்ல தண்ணீர் தேங்கி இருப்பதால் ஏடிஸ் எஜிப்டே கொசுக்களின் உற்பத்தி அதிக அளவில் பெருக்கமடைந்து டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது.
இதன் விளைவாக தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 30 பேர்  டெங்குவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களும், தங்க பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here