இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வெயிலின் தாக்கம் ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் குழந்தைகள், பெரியவர்கள் உட்பட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வெப்ப அலை காரணமாக ஓர் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது சவுதி அரேபியாவுக்கு ஹஜ் புனிதப்பயணம் சென்ற ஜோர்டனைச் சேர்ந்த 14 பேர், ஈரானை சேர்ந்த 5 பேர் என 19 பேர் கடும் வெப்ப அலையால் உயிரிழந்து உள்ளனர். புனிதப்பயணம் வந்துள்ள மேலும் 2,760 பேர் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும், பயணிகள் கவனமாக இருக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
![](https://enewz.in/wp-content/uploads/2024/06/heat-wave-222-1024x512.jpg)