வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலில் கண்ணன் பல்லவி திருமணம் இனிதே நடந்து முடிந்துள்ளது. பல்லவி வீட்டில் உள்ளவர்களை பழிவாங்குவதற்காக இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார். இனிமேல் வீட்டில் என்ன என்ன நடக்க போகிறது என்று தான் தெரியவில்லை.
ஆனால் சீரியல் ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே நல்ல வரவேற்பை பெற்று விட்டது. பிரவீன் பென்னட் இயக்கம் இரண்டு சீரியல்களும்(வீட்டுக்கு வீடு வாசப்படி, மகாநதி) டாப் ரேஞ்சில் போயிக்கொண்டுள்ளது. இந்த இரண்டு சீரியல்களிலுமே மேரேஜ் ட்ராக் தான் ஓடிக்கொண்டுள்ளது. இனிமேல் தான் வீட்டில் பிரச்சனையே ஆரம்பிக்கவுள்ளது. கண்ணனை வைத்து இனி பல்லவி என்ன என்ன செய்ய இருக்கிறார் என்பது தெரியவில்லை.
அதுமட்டுமின்றி அஜய் நிலைமை என்ன என்பதும் புரியவில்லை. அஜய்யை வீட்டில் சேர்த்து கொள்வது என்பதே நடக்காத ஒன்று தான். இனி வீட்டில் என்ன என்ன நடக்குமோ என்ற விறுவிறுப்புடன் சீரியல் நகரப்போகிறது. இதனால் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.