தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் நல்ல வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில், நாளை மறுநாள் (மே 24) வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, வடகிழக்கு திசையில் நகர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல் தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு, இன்றும் (மே 22) நாளையும் (மே 23) வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
அப்படி போடு.., ரஜினியின் ’படையப்பா’ திரைப்படம் ரீ-ரிலீஸ்.. கில்லி வசூலை மிஞ்சுமா ??