தமிழக அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் தமிழகத்தில் தற்போது வேகமாக பரவி வரும் கருப்பு பூஞ்சை பாதிப்பின் சிகிச்சைக்காக 5000 குப்பி மருந்துகளை வாங்க உத்தரவிட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்தியாவில் மியுகோர்மைகோசிஸ் என்ற தொற்று அதிகரித்து வருவதால் இதற்கு மருந்து தேவை என உதவி கேட்டு பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த தொற்று அதிகமாக பரவுகிறது. இந்த அரிய வகை தொற்றுக்கு சிகிச்சையில் பயன்படுத்தக்கூடிய ஆம்ஃபோடெரிசின்-பி என்னும் மருந்துக்கு இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சில இடங்களில் கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் அந்நோயை தொற்று நோயாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முன்னர் மத்திய அரசும் கருப்பு பூஞ்சை பாதிப்பை தொற்று நோயாக அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியது.
எனவே இந்த நோய் பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்க மருந்து தேவைகளும் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் இந்த உத்தரவை இட்டுள்ளது. மேலும் தனியார் மருத்துவமனைகள் தங்களுக்கு தேவையான மருந்துகளை அந்தந்த முகமைகள் மூலம் வாங்கிக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!