டீக்கடைக்காரர் மின்சாரம் தாக்கி பலி – சிவகாசியில் நடந்த கோர விபத்து!!!

0

சிவகாசி அருகே சாலையில் தொங்கிய மின்கம்பியில் இருந்த மின்சாரம் தாக்கியதில்; இரு சக்கர வாகனத்தில் வந்த கடைக்காரா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

டீக்கடைக்காரர் மின்சாரம் தாக்கியதில் பலி:

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே , இரு சக்கர வாகனத்தில் வந்த தேநீா் கடைக்காரா் சாலையில் தொங்கிய மின்கம்பி கழுத்தில் சிக்கியதில் உயிரிழந்தாா். தூத்துக்குடியிலிருந்து தனியார் பேப்பர் மில்லுக்கு காலியான கண்டெய்னர் லாரி ஒன்று சுக்கிரவாரபட்டி வந்து கொண்டிருந்தது.

சிவகாசி-சாத்தூா் சாலையில் பாரைப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் வந்து கொண்டிருக்கும் போது; கட்டுப்பாட்டை இழந்த லாரி அங்கிருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் மின்கம்பம் முழுவதுமாக சேதமடைந்து அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது.

மேலும் சாலை மீது செல்லும் மின்கம்பிகள் அறுந்து மிகவும் தாழ்வாகத் தொங்கின. அப்போது சிவகாசி பேருந்து நிலையம் அருகே தேநீா் கடை நடத்தி வந்த அனுப்பன்குளம் செந்தில்குமாா் (45), இவரது கடையில் வேலைபாா்க்கும் பாஸ்கர் மற்றும்;  இவரது உறவினரான விருதுநகரைச் சோ்ந்த நந்தகுமாா் (25) ஆகிய மூவரும் பைக்கில் சாத்தூரிலிருந்து சிவகாசி நோக்கி வந்துகொண்டிருந்தனா்.

பைக்கில் பாரைப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது; சாலையின் நடுவே தொங்கிக்கொண்டிருந்த மின்கம்பி; இரு சக்கர வாகனத்தை ஓட்டிவந்த செந்தில்குமாா் கழுத்தில் சிக்கியது; மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மின்தடை ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்ததை அடுத்து இந்த கோர சம்பவம் நிகழ்ந்தது. மேலும் அவருடன் வந்த இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து; லாரி டிரைவர் காந்தியை கைது செய்தனர்.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here