‘ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு’ – நடிகர் ரஜினிகாந்த்!!

0
Rajnikanth
Rajnikanth

தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் பல்வேறு அரசியல் கட்சிகள் இறங்கி உள்ளன. இந்த தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியும் போட்டியிட உள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன்னர் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் கட்சி துவங்குவது குறித்து முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது கட்சி குறித்த அறிவிப்பை ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். அதில் ‘ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு’ “மாத்துவோம், எல்லாத்தையும் மாத்துவோம், இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல” என்ற ஹேஷ்டேக்களுடன் அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். தற்போது இது ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறி உள்ளதால் கொண்டாடி வருகின்றனர்.

“தமிழன் என்று சொல்லடா..தலை நிமிர்ந்து நில்லடா..”!!

அவரது பதிவில், ‘நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்றி, ஜாதி மதச்சார்பற்ற ஆண்மீக அரசியல்’ உருவாகுவது நிச்சயம்’ ‘அற்புதம், அதிசயம் நிகழும்’ என தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக கட்சி தொடங்குவது குறித்து வெறும் வாய்மொழியாக மட்டுமே கூறி வந்த ரஜினிகாந்த் அவர்கள், தற்போது முறைப்படி அறிவிப்பை வெளியிட்டு உள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here