சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக இரு விக்கெட்டுகளை கைப்பற்றிய தமிழக வீரர் நடராஜனை அனைவரும் பாராட்டி வரும் சமயம் நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளர்.
“யார்க்கர்” ஸ்பேசியலிஸ்ட் நடராஜன்:
இந்திய கிரிக்கெட் அணியியல் திறமையுள்ள வீரர்களுக்கு எப்போதுமே வாய்ப்புகள் கொடுக்கப்படும். அப்படி தற்போது இந்திய அணியில் தமிழகத்தில் உள்ள சேலம் மாவட்டத்தை சேர்ந்த நடராஜன் விளையாடி வருகிறார். தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஒரு நாள் போட்டிகளில் மோதுகின்றன. இதில் “யார்க்கர்” நடராஜனும் விளையாடுகிறார். முதன் முதலாக தமிழக அளவில் நடைபெறும் டிஎன்பிஎல் போட்டிகளில் பங்கேற்று படிப்படியாக தனது விடாமுயற்சி காரணமாக இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
நேற்று தனது முதல் சர்வதேச போட்டிகளில் பங்கேற்றார். தனது முதல் போட்டியிலேயே இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணி வெற்றி பெற பெரும் பங்கு வகித்தார். இதனால் அனைத்து தரப்பினரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
பலரும் பாராட்டு:
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரை பாராட்டி ட்வீட் செய்துள்ளார். அதில் இந்திய அணிக்காக தனது முதல் போட்டியிலேயே முத்திரை பதித்துள்ளார் நடராஜன். நம் மண்ணின் மைந்தன் நடராஜன் மெம்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி!!
அதே போல் திரையுலக நடிகரான சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் “நல்ல முயற்சி செய்து விளையாடி இருக்கிறீர்கள். ஆஸ்திரேலியாவில் முதல் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அதுவும் நீல நிற ஜெர்சியில் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எங்கள் அனைவருக்கும் பெருமையான தருணம். “தமிழன் என்று சொல்லடா..தலை நிமிர்ந்து நில்லடா..” என்று பதிவிட்டுள்ளார்.