Friday, May 17, 2024

டெல்லியில் போராடிவரும் விவசாயிகளின் பேஸ்புக் பக்கம் முடக்கம் – கொந்தளித்த மக்கள்!!

Must Read

டெல்லியில் போராட்டம் மேற்கொண்டு வரும், விவசாயிகளின் முகநூல், மற்றும் இன்ஸ்டாக்கிராம் பக்கம் முடக்கப்பட்டதை தொடர்ந்து கடும் கொந்தளிப்பு நிலவி வருகிறது. மேலும் போராட்டம் தீவிரமடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயிகள் போராட்டம்:

கடந்த நவம்பர் 26 முதல், அரசு கொண்டு வந்த 3 வேளாண் மசோதாக்களை தடை செய்யக்கோரி பல்லாயிரக்கணக்கான வட மாநில விவசாயிகள், டெல்லி புராரி மைதானத்திலும், எல்லை பகுதிகளிலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமது போராட்டத்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் வகையில் அவர்கள் தங்களது நடவடிக்கைகளை கிசான் ஏக்தா மோர்ச்சா என்ற முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர். இந்த போராட்டம் குறித்த தகவல்கள் உலகம் முழுக்க பரவி அவர்களுக்கு மக்களின் ஆதரவை பெற்று தந்தது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

போராட்ட குழுக்களின் தலைவர்களோடு அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் பலன் கிடைக்கவில்லை. அரசு அளித்த வாக்குறுதிகளில் நம்பிக்கையின்றி அவற்றை ஏற்க மறுத்த விவசாயிகள், தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அவர்கள் தங்களது போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் கிசான் ஏக்தா மோர்ச்சா என்ற முகநூல் பக்கத்திலும், இன்ஸ்டாகிராமிலும் போராட்ட தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த முகநூல் பக்கம் தற்போது Facebook நிறுவனத்தால் முடக்கப்பட்டுள்ளது இது போராட்டக்கார்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது.

இந்தியா – இங்கிலாந்து இடையே டிச.31 வரை விமான போக்குவரத்துக்கு தடை!!

நேற்றைய போராட்டத்தை நேரலையில் வெளியிட்ட விவசாயிகள், வரும் திங்கள் கிழமை முதல் கால வரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள போவதாகவும் அதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்பர் எனவும் தெரிவித்தனர். அதன் பிறகே அந்த முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் நீக்கப்பட்டது. சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் தற்போது அவை செயல்பாட்டிற்கு வந்துள்ளன. சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்த Facebook நிறுவனம், ஏன் நீக்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி பிரிவது கன்பார்ம் தானா?? அதிர வைக்கும் முக்கிய தகவல்!!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டிலும் ஜொலித்து வருபவர் தான் ஜிவி பிரகாஷ் குமார். தற்போது இவர் இடிமுழக்கம், 13 போன்ற படங்களில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -