சின்னத்திரை நடிகை சித்ரா தற்போது தற்கொலை செய்து கொண்டதை அடுத்து தொடர்ந்து பல மர்மங்கள் வெளியாகி வருகிறது. சித்ராவின் வழக்கில், முக்கியமான ஆதாரத்தில் சிக்கியவர் தான் விஜய் டிவி தொகுப்பாளர் ரக்சன். இதுவரையிலும் அமைதியாக இருந்த ரக்சன் தற்போது இதை பற்றி பேசியுள்ளார்.
சித்ரா தற்கொலை வழக்கு :
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை சித்ரா. 8 வருட போராட்டங்களுக்கு பிறகு தான் மக்கள் மத்தியில் நிரந்தர இடத்தை பிடித்தார். இந்த சீரியலே அவருக்கு உறுதுணையாக இருந்தது. இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் மக்களிடையே இது பெரும் துயரையும் ஏற்படுத்தியுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஹேமந்த்துக்கும், சித்ராவிற்கும் திருமணம் நடந்துவிட்டது என்பதே ஒரு திடுக்கிடும் விஷயமாகவே உள்ளது. ஏன் இப்படி அவசரமாக திருமணம் செய்து கொள்ள வேண்டும், அதுவும் ஹேமந்த் நல்லவன் கிடையாது என பலரும் சொல்லியும் அதையும் தாண்டி ஏன் சித்ராவை அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும்? என மக்கள் மத்தியில் பல கேள்விகள் உள்ளன.
ஹேமந்த்தை விசாரித்த போது தான் சித்ராவை சந்தேகித்து கொடுமை படுத்தியது தெரியவந்துள்ளது. அதிகப்படியான மனஅழுத்தத்தின் காரணமாக தான் சித்ரா தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் கல்யாணத்திற்கான அனைத்து செலவையும் சித்ராவே பார்த்துள்ளார். இதனால் கடனும் அதிகமாகி அதனை அடைப்பதற்காக தான் கிடைத்த அனைத்து நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.
மீண்டும் குற்றாலத்தில் குளிக்க தடை – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!!
மேலும் ரக்சனும் சித்ராவும் காதலித்து வந்ததாகவும் இருவரும் தனியாக இருக்கும்போது சித்ராவிற்கு தெரியாமல் வீடியோ எடுத்து அவரை மிரட்டி வந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் ரக்சன் தரப்பில் இருந்து எந்த எதிர்ப்பும் வராமல் இருந்த நிலையில் தற்போது ஒரு செய்தி வலைத்தளங்களில் உலாவி வருகிறது. அதாவது ரக்சன் தான் அந்த மாதிரி எதுவும் செய்யவில்லை. இதுவரையிலும் உழைத்து தான் சம்பாதித்திருக்கிறேன் என்று கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.