தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவருக்கும் தெலுங்கு நடிகை அனிஷாவிற்கும் நிச்சயம் நடந்த நிலையில் இருவருக்கும் பிரேக்கப் ஏற்பட்டது. தற்போது அனிஷா தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஷால், அனிஷா பிரேக்கப்
தமிழ் திரையுலகில் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். ஆரம்பத்தில் துணை இயக்குனராக அறிமுகமாகி செல்லமே படத்தில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமானவர். அதன் பிறகு திமிரு, சண்டக்கோழி, மலைக்கோட்டை போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தார் விஷால்.
இவரது நண்பர்களான ஆர்யா, ஜீவா, உதயநிதி என பலருக்கும் திருமணம் நடந்த நிலையில் இவருக்கு எப்பொழுது திருமணம் என பலரும் காத்துக் கொண்டிருந்தனர். பிறகு தடாலடியாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தெலுங்கு நடிகை அனிஷாவிற்கும், இவருக்கும் நிச்சயம் நடைபெற்றது. இது காதல் திருமணமும் கூட.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பெற்றோர்கள் சம்மதத்துடனேயே இவர்களின் நிச்சயமும் நடைபெற்றது. இவர்களின் திருமண நாளும் தள்ளிக்கொண்டே போனது. நடிகர் சங்க தலைவரானதால் அதிலேயே தன் கவனத்தை செலுத்தி வந்தார். இதனால் நடிகர் சங்க கட்டடம் கட்டிய பிறகு தான் திருமணம் என்றும் பேச்சுக்கள் எழுந்தது.
இந்த சமயத்தில் தான் அனிஷா வலைப்பக்கத்தில் விஷாலுடன் எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கினார். ஒருவேளை பிரேக்கப் ஆகிடுச்சோ?? என பலரும் கேட்ட நிலையில் அதற்கு எந்த பதிலும் வரவும் இல்லை. அதன் பின் விஷாலே தனக்கு பிரேக்கப் ஏற்பட்டு விட்டதாக கூறினார். தற்போது பயில்வான் கூட லட்சுமி மேனனும், விஷாலும் நெருக்கமாக இருக்கும் வீடியோவை பார்த்து தான் அனிஷா பிரேக்கப் செய்துவிட்டதாக கூறினார்.
‘அண்ணன், அண்ணி இப்போல்லாம் சரியே இல்லை’ – கதிரிடம் புலம்பும் ஜீவா!!
ஆனால் இதற்கும் விஷால் தரப்பில் இருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை. இந்நிலையில் அனிஷாவிற்கு வேகமாக வரன் தேடி வந்துள்ளனர். தற்போது தொழிலதிபருடன் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விஷாலும் கவலையில் உள்ளாராம்.