Saturday, May 18, 2024

வேலை கிடைத்த மகிழ்ச்சியில் கண்ணம்மா.., கவலையில் சௌந்தர்யா – பரபரக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!!

Must Read

பரபரப்பான கதைக்களத்துடன் போகும் “பாரதி கண்ணம்மா” சீரியல் தற்போது மேலும் சில திருப்பங்களுடன் செல்ல இருக்கிறது. துளசி, கண்ணம்மா மற்றும் குழந்தைக்கு செய்யும் உதவியை கூட கண்ணம்மா தனது மாமியார் தான் செய்கிறாரோ?? என்று சந்தேகம் கொள்கிறார்.

“பாரதி கண்ணம்மா”

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் “பாரதி கண்ணம்மா”. யதார்த்தமான கதைக்களத்துடன் அமைத்து வந்ததால் அனைவரும் விரும்பி பார்த்தனர். பல வித திருப்பங்களுடன் இந்த சீரியல் செல்கிறது. தற்போது கண்ணம்மாவின் இரு குழந்தைகளில் ஒரு குழந்தை சௌந்தர்யாவிடம் வளர்ந்து வருகிறது. கண்ணம்மா துளசி என்ற பெண்ணுடன் வசித்து வருகிறார். துளசி தான் அவரையும் அவரது குழந்தையையும் பார்த்து கொள்கிறார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதனால் கவலை அடையும் கண்ணம்மா தனக்கு என்று ஒரு வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்து வேலை தேடுகிறார். அப்படி அவர் தேடி செல்லும் போது அவருக்கு தைக்கும் வேலை ஒன்று 10,000 ரூபாய் சம்பளத்துடன் கிடைக்கிறது. இதனை அவர் துளசி மற்றும் தனது குழந்தையுடன் மகிழ்ச்சியாக பகிர்ந்து கொள்கிறார். இதனால் துளசி சற்று கவலை அடைகிறார். ஆனாலும், கண்ணம்மா அவரை சமாதானம் செய்து தான் வேலைக்கு போவதில் உறுதியாக இருக்கிறார்.

கவலை அடையும் சௌந்தர்யா:

துளசி உடனடியாக இதனை சௌந்தர்யாக்கும் தனியாக சென்று தெரிவிக்கிறார். முதலில், சௌந்தர்யா அவர் பேசும் போது பதறுகிறார். பின், துளசி தான் அறைக்குள் இருந்து பேசுவதாக உறுதி அளிக்கிறார். பின், அவர் சௌந்தர்யாவிடம் கண்ணம்மாவிற்கு வேலை கிடைத்த செய்தியினை தெரிவிக்கிறார். இதனால் சௌந்தர்யா மனவேதனை அடைகிறார். பின், தனது கணவரிடம் சொல்லி கண்ணம்மாவிற்கு மறைமுகமாக உதவி செய்யலாமா? என்று கேட்கிறார்.

இதனை மறுக்கும் அவர் ஏற்கனவே அவருக்கு பெட்ரோல் பங்கில் உதவி செய்து கண்ணம்மா வேலையை விட்டு சென்ற விவரத்தை எடுத்துரைக்கிறார். அதே போல் கண்ணம்மா சுயமாக வாழ நாம் தான் உதவி புரிய வேண்டும் என்கிற அவசியத்தை எடுத்துரைக்கிறார். இதனால் அரைமனதாக சமாதானம் அடையும் சௌந்தர்யா, குழந்தையை பார்க்க சென்று விடுகிறார். கண்ணம்மாவிற்கு தனது இன்னொரு குழந்தை சௌந்தர்யாவிடம் உள்ளது எப்போது தெரிய வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருக்கின்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -