விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் மக்கள் மத்தியிலும் சிறந்த வரவேற்பு பெற்று வருகிறது. ஏனெனில் இதுவரை இல்லாத விதமாக ஒரு கூட்டு குடும்பத்தை மையமாக வைத்த கதையாகும். இந்நிலையில் கதிர், முல்லை எப்பொழுது சேருவார்கள்?? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அந்த காட்சி இன்று ஒளிபரப்பாகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சீரியல். இது தொடங்கிய கொஞ்ச நாட்களிலேயே சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. அண்ணன், தம்பி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இந்த சீரியல் எடுத்துக்காட்டாக இருக்கும்.
ஜீவா, மீனா மீது கொண்ட காதலால் இறுதியில் கதிர் மற்றும் முல்லைக்கு எதிர்பாராத திருமணம் நிகழ்ந்தது. ஆரம்பத்தில் இவர்கள் சண்டையிட்டுக் கொண்டாலும் நாளடைவில் இவர்களுக்கும் காதல் மலர்ந்தது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் தொடர்ந்து நிறைய பிரச்சனைகள் வந்து முடிவடைந்தது. இந்நிலையில் முல்லை தனத்திடம், எங்களுக்குள் தாமத்திய உறவு இதுவரை இல்லை என்று கூறுகிறார். இதை கேட்டு தனம் மிகவும் அதிர்ச்சி அடைந்து முல்லையை திட்டுகிறார்.
மேலும் இதை பற்றி தனம் தன் கணவரிடம் கூறுகிறார். மூர்த்தி, கதிரை சந்தித்து “தாம்பத்திய உறவு இல்லாம என்ன வாழ்க்கை வாழுற” என்று திட்டுகிறார். பின்பு கதிர் முல்லைக்கு போன் செய்து இதையெல்லாம் வீட்டுல சொல்லுவாங்களா?? என்று கோவமடைகிறார். என்ன ஆனாலும் சரி இன்று நமக்குள் தாம்பத்திய உறவு இருக்கும் என்று சவால் விடுகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மூர்த்தி மற்றும் தனம் குழந்தையை பார்க்க மீனா வீட்டிற்கு செல்கிறார்கள். தனம் மீனாவின் குழந்தையை கையில் வாங்கி கொஞ்சுகிறார். இதனை பார்த்த மீனாவின் அப்பா மிகுந்த கோவம் அடைகிறார். தனக்குள்ளே கோவத்தை வைத்துக் கொண்டு வெளியே சிரித்துக் கொண்டு பேசுகிறார்.
மீனாவின் அப்பா தன் மகள் மற்றும் மருமகன் தன்னுடனே இருக்க வேண்டும். அந்த குடும்பத்தில் இருந்து ஜீவாவை பிரிக்க வேண்டும் என்று எண்ணுகிறார். இதையெல்லாம் கடந்து இந்த குடும்பம் ஒற்றுமையாக இருக்குமா? இருக்காதா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.