இந்திய ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 10 செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி -49 என்ற ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று தெரிவித்துள்ளது. இவை 26 மணிநேர கவுண்ட்டனை முடித்து பாயும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிஎஸ்எல்வி சி- 49
பிஎஸ்எல்வி சி -49 என்ற ராக்கெட் இன்று மாலை 3.02 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் என்ற இடத்திலிருந்து செலுத்தப்படும். புவி கண்காணிப்பு பணிக்காக உருவாக்கப்பட்டது இந்த இ.ஓ.எஸ் -01 என்ற செயற்கைக்கோள்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இன்று இந்த இ.ஓ.எஸ் 01 என்ற செயற்கைகோள் பிஎஸ்எல்வி சி-49 என்ற ராக்கெட்டின் மூலம் விண்ணில் செலுத்துவதாக இந்திய ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ தகவல் தெரிவித்து உள்ளது.
10 செயற்கைக்கோள்
பிஎஸ்எல்வி சி -49 என்ற ராக்கெட்டுடன் 10 செயற்கைகோள்களான லிதுவேனியா நாட்டில் கண்டுபிடித்த 1 செயற்கைக்கோள், அமெரிக்காவின் 4 லெமூர் செயற்கைக்கோள் மற்றும் லக்சம்பர் நாட்டின் 4 கடல்சார் பயன்பாட்டு செயற்கைக்கோளும் இன்று பிஎஸ்எல்வி வி-49 உடன் விண்ணில் பாயும்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
இவை 26 மணிநேர கவுண்ட்டவுனை முடித்து விட்டு விண்ணில் செல்லும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து ராக்கெட்டின் செயல்பாடுகளை கண்காணித்து வருகின்றனர். நேற்று அதற்கான எரிபொருளை நிரப்பும் பணி 4 ஆவது நிலையாக நடந்தது.