Thursday, May 16, 2024

எதிர்பார்த்ததை விட நிலவில் அதிகளவில் தண்ணீர் இருப்பது உறுதி – நாசா தகவல்!!

Must Read

நாசா விண்வெளி மையத்தின் சோபியா தொலைநோக்கி மூலமாக, விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததை விட அதிக அளவு நிலவில் நீர் இருப்பது தெரிய வந்துள்ளது. நிலவின் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் பரவி உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

நிலவில் தண்ணீர்??

சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களுக்கு மத்தியில் பூமி மட்டும் தான் மனிதர்கள் வாழ தகுதியான இடமாக கருதப்படுகிறது. காரணம், பூமியில் மட்டும் தான் சரியான அளவில் தண்ணீர், காற்று மற்றும் இதர பிற அம்சங்கள் உள்ளன. பூமியின் துணை கோளாக கருதப்படுவது, நிலவு. நிலவின் பரப்பளவு, அதன் அம்சங்கள் பற்றி பல ஆராய்ச்சிகள் நடைபெற்றுள்ளன. கடந்த 2009 ஆம் ஆண்டு இந்தியா சந்திராயன் 2 விண்கலத்தை நிலவிற்கு அனுப்பியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த விண்கலம் பல புகைப்படங்களை எடுத்தது. அதில் நிலவில் நீர் உள்ளது போல் பல புகைப்படங்கள் இருந்தன. அதனால் நிலவில் தண்ணீர் உள்ளதா? என்று விஞ்ஞானிகள் பலருக்கும் சந்தேகம் எழுந்தது.

பல் மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு – தேசிய தேர்வு முகமை!!

இதனை அடுத்து பல ஆராய்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிலையில் நாசா விண்வெளி மையத்தின் சோபியா தொலைநோக்கி மூலமாக நிலவில் தண்ணீர் உள்ளதா? என்று பார்க்கப்பட்டது. அதில் தற்போது நிலவின் பல பகுதிகளில் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாசா வெளியிட்ட செய்தி குறிப்பு:

இது தொடர்பாக நாசா ஒரு செய்தி அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, “சூரிய ஒளி விழாத நிலவின் தென்துருவ பகுதிகளில் தண்ணீர் 40 ஆயிரம் கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளது. நிலவில் மிகப்பெரிதாக கருதப்படும் பள்ளங்களில் ஒன்றான கிளவியஸ் பள்ளத்தில் நீர் மூலக்கூறுகள் உள்ளன. விஞ்ஞானிகள் எதிர்பார்த்த அளவினை விட மிக அதிகமாகவே தண்ணீர் நிலவில் உள்ளது. கூடுதலாக, சில பகுதிகளில் மட்டும் நீர் இல்லை, அனைத்து பகுதிகளிலும் நீர் பரவி உள்ளது”

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

“இது மனிதர்களுக்காக கூட எதிர்காலத்தில் பயன்படலாம். பனித்திட்டுகளில் தண்ணீரின் முழு கூறுகள் மறைந்துள்ளன” இவ்வாறாக தெரிவித்துள்ளனர். நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் நீர் எவ்வாறு உருவாகுகிறது? அதனை எவ்வாறு பயன்படுத்தலாம்? போன்ற ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ஒரே நாளில் திரைக்கு வரும் 4 தமிழ் திரைப்படங்கள்.. உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படங்கள்  கதை ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பிளாக்பஸ்டர் வெற்றிகளை குவித்து வருவதை நாம் அறிவோம். ஏன் தமிழ் ரசிகர்கள் ஒரு படி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -