பிக் பாஸ் சீசன் 4 தற்போது 3 வாரங்களை கடந்துள்ளது. இந்நிலையில் நேற்று விஜயதசமி சிறப்பு தொடராக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு இடையே பல போட்டிகள் கொடுக்கப்பட்டது. சந்தோசமாக காட்டப்பட்ட பிக் பாஸ் வீட்டில் தற்போது மீண்டும் ஒரு சண்டை ஏற்பட்டுள்ளது.
பிக் பாஸ்
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 3 இல் பல சண்டைகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. ரியோ, அர்ச்சனா மற்றும் நிஷா பிக் பாஸ் வீட்டில் குரூப்பிஷம் ஏற்படுத்தி வருகின்றனர். அதனை நம்மால் கண்கூடாகவே பார்க்க முடிகிறது. மேலும் அதனை தொடர்ந்து எடுத்துரைக்கும் வகையில் பாலாஜி வெடுக்கென்று பேசி விடுகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் ஹவுஸ் மேட்ஸ் பலரும் அவரை நாமினேட் செய்துள்ளனர். இந்த வார எவிக்ஷனில் ரம்யா பாண்டியன், ஆரி, ஆஜித், அனிதா, வேல் முருகன், ஜித்தன் ரமேஷ், சனம், நிஷா, பாலாஜி போன்றோர் இடம் பிடித்துள்ளனர். நேற்றைய விஜயதசமி எபிசோடில் ஹவுஸ்மேட்ஸ் நகர்ப்புறம், கிராமப்புறம் என இரண்டு அணிகளாக பிரிந்து பல டாஸ்குகளை விளையாடினர்.
இதில் நகர்ப்புற அணியே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த இரண்டு அணிகளையும் அனிதா தலைமையாக இருந்தார். தற்போது பிக் பாஸ் ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில் அனிதா கன்ஃபெசன் ரூமில் அழுவது போல காட்டப்பட்டிருந்தது. அதாவது தன்னை அனைவரும் கார்னர் செய்வதாகவும், தன்னை யாரும் பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை என்றும் கூறி கதறி அழும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
மேலும் அடுத்த ப்ரோமோவில் பாலாஜி அனைவரையும் அம்மி அரைக்க விடுகிறேன் என்று கூறியதை அர்ச்சனா கேட்டு அவரிடம் சண்டைக்கு செல்கிறார். மேலும் நிஷா இதனை, பெண்களை அம்மி அரைக்க விடுகிறேன் என்று கூறியதாக மாற்றி சண்டை எடுக்கிறார். வேல் முருகன் கேமராவில் இதெல்லாம் பதிவாகி இருக்கும் என்று கூறுகிறார். ரியோவும் பாலாஜி இடம் சண்டை இடுகிறார்.
இதனால் பிக் பாஸ் களமே ஒரு யுத்த களமாக மாறி வருகிறது. இந்நிலையில் பாலாஜி மீது கேபிரியாலாவிற்கு ஒரு ஈர்ப்பு உள்ளதாக தெரிகிறது. ஆனால் பாலாஜிக்கோ ஷிவானி மீது ஒரு ஈர்ப்பு உள்ளது. மேலும் இது முக்கோண காதல் கதையாக மாற வாய்ப்புள்ளதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.