Friday, May 3, 2024

ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய பிராவோ – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்த அதிர்ச்சி!!

Must Read

நடப்பு ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்பத்தில் இருந்தே சரியாக விளையாடாததால் தற்போது பாயிண்ட் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது, இப்படியாக இருக்க தற்போது அதிர்ச்சியளிக்கும் வண்ணமாக அந்த அணியின் முக்கிய ஆல்-ரவுண்டர் பிராவோ போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

சென்னை அணி:

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐ.பி.எல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. காரணம், இந்த ஆண்டு கொரோனா பரவலால் போட்டிகள் நடைபெறாதோ? என்று அனைத்து தரப்பு ரசிகர்களும் கவலை அடைந்தனர். ஆனால், போட்டிகளை நடத்துவதில் BCCI தீவிரமாக இருந்தது. முதல் போட்டியில் பலத்த எதிர்பார்ப்புகளுடன் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின. அதில் சென்னை அணி அபாரமாக வெற்றி பெற்றது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

ஆனால், அடுத்தடுத்த போட்டிகளில் வீரர்கள் சரியாக விளையாடவில்லை. இது அனைத்து தரப்பு ரசிகர்களையும் அதிருப்தி அடைய வைத்தது. தற்போது வரை நடந்து முடிந்த 10 போட்டிகளில் வெறும் 3 போட்டிகளில் வெற்றி பெற்று, 8 போட்டிகளில் தோல்வி அடைந்து பாயிண்ட் பட்டியலில் சென்னை அணி தற்போது 8 ஆம் இடத்தில் உள்ளது. அதில் கடைசியாக, சென்னை அணி டெல்லி அணியுடன் மோதியது. அப்போது, அணியின் ஆல் ரவுண்டர் ஆன ப்ராவோவிற்கு காயம் ஏற்பட்டது. அதனால் அவர் அந்த போட்டியின் பாதியிலேயே சென்று விட்டார். அதனால் தான் கடைசி ஒவேரில் ஜடேஜா பந்து வீசினார்.

காயம் காரணமாக விலகல்:

அப்படி அந்த போட்டியில் பிராவோ பந்து வீசியிருந்தால் சென்னை அணி வெற்றி பெற்றிருக்க சாத்திய கூறுகள் இருந்திருக்கும் என்று பலர் மத்தியிலும் கூறப்பட்டது. தற்போது பிராவோ தனது காயம் காரணமாக இனி வரும் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று சென்னை அணியின் தலைமை அறிவித்துள்ளது. இது அனைத்து ரசிகர்களையும் கவலை அடைய வைத்துள்ளது.

மிரள வைக்கும் வெங்காய விலை – பசுமை பண்ணைகளில் 45 ரூபாய்க்கு விற்பனை!!

இது குறித்து சென்னை அணியின் தலைமை அதிகாரி காசி விஸ்வநாதன் நிருபர்களிடம் கூறியதாவது,”சென்னை அணியின் ஆல் ரவுண்டர் ஆன பிராவோ தனது காயம் காரணமாக இனி வரும் போட்டிகளில் இருந்து விலகிக் கொள்வார். அவர் வெஸ்ட் இண்டீஸ் திரும்புகிறார். தனிப்பட்ட வீரரின் முடிவினை நாம் மதிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். ப்ராவோவின் இந்த முடிவு சென்னை அணிக்கு பெரிய பலவீனமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -

More Articles Like This

- Advertisement -