சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல நாட்களுக்கு பின் விலை குறைந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை:
எப்போதுமே கச்சா எண்ணெயின் விலையை வைத்து தான் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிர்ணயிக்கப்படும். இதனை நிர்ணயிப்பது எண்ணெய் நிறுவன உரிமையாளர்கள் தான். கடந்த மார்ச் மாதம் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால், அதற்கடுத்த சில நாட்களில் விலை உயர்ந்து கொண்டே வந்தது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் கவலை அடைந்தனர். தற்போது தான் தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்த நேரத்தில் சற்று நிம்மதி அடையும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைந்துள்ளது.
இன்றைய விலை நிலவரம்:
இன்று சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 11 காசுகள் குறைந்து ரூ.84.85-க்கு விற்கப்படுகிறது. அதே போல் டீசலும் லிட்டருக்கு 12 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.78.26 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு பயத்தால் மதுரை மாணவி தற்கொலை!!
தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பி அனைவரும் வேலைக்கு செல்லும் வேளையில் விலை குறைந்துள்ளது அனைவரையும் நிம்மதி அடைய வைத்துள்ளது.