தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான வடிவேலு காமெடிக்கு சிரிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. நமது வாழ்க்கை பயணத்தில் எங்கு எந்த வசனத்தை கேட்டாலும் அவரின் டயலாக் அதில் கலந்து இருக்கும். இன்று அவரின் பிறந்தநாளையொட்டி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
வைகைப்புயல் வடிவேலு:
ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து அவரது கடின உழைப்பால் இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார் காமெடி நாயகன் வடிவேலு. யார் வேண்டுமானாலும் நடித்து விடலாம். ஆனால் மற்றவரை சிரிக்க வைப்பது என்பது ஒரு சிலரால் மட்டுமே முடியும். அந்த வகையில் வைகைப்புயல் வடிவேலு மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
அனைத்து வலைதளங்களிலும் இவரின் காமெடிகளை வைத்தே மீம் எடிட் செய்கின்றனர். மீம் கிரியேட்டர்கள் வடிவேலுவின் காமெடியில் தான் கன்டென்ட் எடுப்பார்கள். ஒருவரை விமர்சிக்க வேண்டும் என்றாலே அது வடிவேலு வெர்சன் தான். சிலரது காமெடிகள் பார்த்தல் கூட சிரிப்பு வராது.
ஆனால் இவரது காமெடியை கேட்டால் கூட சிரிப்பு வரும். மனஅழுத்தம், மன உளைச்சல் உள்ளவர்களுக்கு வடிவேலு காமெடி ஒரு பெரிய அருமருந்து. நம் நண்பர்கள் உறவினர்கள் என யாரிடம் பேசினாலும் ஒரு வார்த்தையிலாவது வடிவேலுவின் காமெடி கலந்திருக்கும். அந்த அளவிற்கு மக்களின் செல்வாக்கை பெற்றுள்ளார் நமது வைகைப்புயல் வடிவேலு அவர்கள். இதே போல் மக்களை சிரிக்க வைக்கும் பணியை தொடர அவரை வாழ்த்துவோம்.